Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 8

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

தாத்தாவும் காவியாவும் குளக்கரையில் நின்றிருந்தனர். தாத்தா குளத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவருடைய முகம் வாடி இருந்தது.

“ஏன் தாத்தா கவலையாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் காவியா.

“இது எப்படி இருந்த குளம் தெரியுமா, காவியா?” தாத்தா சொல்லத் தொடங்கினார்.

“இதோ இந்தத் தார்ச்சாலை அப்போது இல்லை. மண்சாலைதான். குளம் முழுவதும் நீர் நிரம்பி இருக்கும்.  போன்றவை தண்ணீர் குடிக்க வந்து போகும்.  குளத்தில் குளிக்கும்.

 துள்ளிக் குதிக்கும்.  கூட்டம் கூட்டமாய் நீந்துவதைப் பார்க்க அழகாக இருக்கும்.  பிடிக்க  நிற்கும். குளத்தின் அருகே பெரிய  இருக்கும். அங்கு

 கீச்சிடும். அதன் பழங்களைக் கொத்தித் தின்ன  பறந்துவரும். இவற்றை எல்லாம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?”

”ஓ.…  அப்படி இருந்த குளமா இது?” என்று வியப்புடன் கேட்டாள் காவியா.

“ஆமாம், ஆனால் இப்போதோ… குளத்தில் எவ்வளவு குப்பைகள் பார். நீரும் வற்றிவிட்டது”, வருத்தத்துடன் சொன்னார் தாத்தா.

நீங்கள் முன்பு பார்த்த அந்தக் குளத்தைப் பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது. இதைச் சரிசெய்ய முடியாதா தாத்தா?”, என்று கேட்டாள் காவியா.

“அதைப்பற்றித்தான் ஊர்த்தலைவரிடம் பேசி இருக்கிறேன். விரைவில் சரிசெய்வதாகச் சொல்லியிருக்கிறார்” என்றார் தாத்தா.

பழைய குளம் காவியாவின் மனதில் கற்பனையாக விரிந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி நடக்கத் தொடங்கினாள் காவியா.

வாய்மொழியாக விடை கூறுக

1. குளம் எப்படி இருந்ததாகக் காவியாவிடம் தாத்தா கூறினார்?

விடை எழுதுக

1. குளம் தற்போது எவ்வாறு உள்ளது?

விடை:

குளம் குப்பைகள் கலந்து மிகவும் மாசடைந்து உள்ளது.

2. குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா யாரிடம் கூறினார்?

விடை:

குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா ஊர்த்தலைவரிடம் கூறினார்.

இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

என்னைப் பார்த்து உனக்கு பயம் வரவில்லையா?

ஏன் பயப்பட வேண்டும்?

ஏன் அழுகிறாய் செல்லம்?

எப்படி இருக்கிறாய்?

அனைவரும் பகிர்ந்து உண்டோம்.

நாம் அனைவரும் வெளியில் செல்வோமா?

சரி. கோவிலுக்கு செல்வோம்

மிக்க மகிழ்ச்சி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top