Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 3

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

கவிதைப்பேழை: சிறுபஞ்சமூலம்

I. சொல்லும் பொருளும்:

  • மூவாது – முதுமை அடையாமல்
  • நாறுவ – முளைப்ப
  • தாவா – கெடாதிருத்தல்

II. இலக்கணக் குறிப்பு

  • அறிவார் – வினையாலணையும் பெயர்
  • வல்லார்– வினையாலணையும் பெயர்
  • விதையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. உரையாமை = உரை + ய் + ஆ + மை

  • உரை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படுமெய்)
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • மை – தொழிற்பெயர் விகுதி

2. காய்க்கும் = காய் + க் + க் + உம்

  • காய் – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – பெயரெச்ச விகுதி

IV. பலவுள் தெரிக.

பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

  1. பெயரெச்சம், உவமைத்தொகை
  2. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  3. வினையெச்சம், உவமை
  4. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

V. குறு வினா

மூவாது மூத்தவர், நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

VI. சிறு வினா

விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக.

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

பாத்தி அமைத்து விதை விதைக்காமலேமுளைக்கும் விதைகளைப் போல அறிவுநுட்பம் மிகுந்தவர் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனித வாழ்வைச் செழுமையாக்குபவை ______________

விடை : அறப்பண்புகளே.

2. ______________ சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை.

விடை : வயதுக்கும், அறிவுக்கும்

3. ______________ வயது ஒரு தடையில்லை.

விடை : சாதனைக்கு

4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ______________.

விடை : சிறுபஞ்சமூலம்.

5. ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து ______________ போக்குகின்றது.

விடை : உடலின் நோயைப்

II. குறு வினா

1. பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளவை எவை?

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவையே பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

2. சிறுபஞ்சமூலம் என்பதற்கு பொருள் யாது?

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.

3. ஐந்து சிறிய வேர்கள் எவை?

  • கண்டங்கத்திரி
  • சிறுவழுதுணை
  • சிறுமல்லி
  • பெருமல்லி
  • நெருஞ்சி

III. சிறு வினா

1. காரியாசான் – குறிப்பு வரைக

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top