Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Science Books Tamil Medium The Living World of Animals

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium The Living World of Animals

அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : விலங்குகள் வாழும் உலகம்

மதிப்பீடு

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்கண்டவற்றை நிரப்புக

1.  நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _____________ என்று அழைக்கலாம்.

விடை : சூழ்நிலை மண்டலம்

2. செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை _____________ மற்றும் _____________ உயிரினங்கள் என வகைப்படுத்தலாம்.

விடை : ஒரு செல் மற்றும் பல செல்

3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு _____________  பயன்படுகிறது.

விடை : திரும்புவதற்கு

4. அமீபா _____________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

விடை : பாேலிக்கால்கள்

II. சரியா? தவறா? – தவறு எனில் சரியான விடையை எழுதக

1. ஒரு உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.

விடை : சரி

2. புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

விடை : தவறு

சரியான விடை : புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபடும்.

3. ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

விடை : சரி

4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

விடை : தவறு

சரியான விடை : பறவைகளால் ஒரு நேரத்தில் இரு கண்கள் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்க முடியும்.

5. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.

விடை : தவறு

சரியான விடை : பாரமீசியம் ஒரு செல் உயிரி.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெப்பமண்டல மழைக் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை நிலப்பரப்பு __________________ என்று அழைக்கின்றோம்

விடை : சுற்றுச்சூழல்.

2. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் __________________ என்று அழைக்கப்படுகின்றன.

விடை : ஒரு செல் உயிரிகள்.

3. மீனின் சுவாச உறுப்பு __________________ ஆகும்

விடை : செவுள்கள்

4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ___________________ .  

விடை : இறங்கும்

5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ___________________ சேமிக்கின்றன.

விடை : காெழுப்பைச்

IV. குறுவினாக்கள்

1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

பறவைகள் கூர்மையான நகங்கள் மற்றும் சக்திவாய்ந்த அலகு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் இரைகளை பிடிக்கின்றன

2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?

இந்தியாவில் ஒட்டகங்களை பாலைவனத்தில் காண முடியும்

3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு பொய்க்கால்கள் ஆகும்.

4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?

  • தலை
  • வால்
  • உடம்பு
  • நாக்கு
  • வாய்
  • கண்

5. பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன?

பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது வால்பகுதியினை பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன

V. சிறு வினாக்கள்

1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.

ஒரு செல் உயிரிபல செல் உயிரி
1. ஒரு செல்லால் ஆனவைபல செல்களால் ஆனவை
2. உயிரியல் உள்ள ஒரு சொல்லே வாழ்க்கைச் செயல்கள்  அனைத்தையும் மேற்கொள்கிறது.செல்களுக்கிடையே வாழ்க்கைச் செயல்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்கள் பெற்றுள்ளன.
3. பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவைபொதுவாக இவை அளவில் பெரியவை
4. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும்.கண்களால் பார்க்க இயலும்.
5. இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது.இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன.
6. செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது
எ.கா. அமீபொ, பாரமீசியம் மற்றும் யூக்ளினாஎ.கா. மண்புழு, மீன், தவளை, பல்லி மற்றும் மனிதன்

2. துருவ கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக

துருவக் கரடி:

பாதிகாப்பிற்கான தடிமனான தோல், வெண்மையான உரோமங்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.

பென்குயின்கள்:

நீந்துவற்கான துடுப்புகள், நடப்பதற்கான இரண்டு கால்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.

3. பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?

பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின்போது ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்குவற்கு வலிவை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.

4. முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை? 

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  1. தொகுதி ஆர்த்ரோபோட்ஸ்
  2. தொகுதி மெல்லுடலிகள்
  3. தொகுதி வலைத் தசைப்புழுக்கள்
  4. தொகுதி சீலெண்ட்டெரேட்டா

VI. விரிவான விடையளி

1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி

  • இதன் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
  • இவை நீர் கிடைக்கும்போதெல்லொம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
  • உலர்ந்த பாலைவனத்திற்கு ஏற்றாற்போல் தன் உடலில் நீர் சேமிக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
  • ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. அதன் சாணம் வறண்டு காணப்படும். மேலும் அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
  • ஒட்டகம் தன் உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால் அவற்றால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும்.
  • ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. சக்தி தேவைப்படும் காலங்களில் ஒட்டகம் தன் திமில் பகுதியில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
  • ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. இதனால் ஒட்டகத்தை “பாலைவனக் கப்பல்” என்று அழைப்பார்கள்.
  • ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
  • நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *